இந்த வலைப்பதிவில் தேடு
In this post we are providing good stories for children and moral stories to develop good thinking for children and spiritual Spiritual Stories, Comedy Stories, Short Stories, Short Novels, Life Stories, and Thenaliraman Stories, Ambulimama Stories, So in which record are the stories of Vikramaditan Vedalam, 63 Nayanmars stories, 12 Alvars stories, and all God stories? Thanks to parents and teachers to connect their children with good stories for the future of their lives
சிறப்புடையது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மடமையும் கொடுமையும் - தெனாலிராமன் கதை
மடமையும் கொடுமையும்
விஜய நகரத்தில் அதிசய சாமியார் வந்திருக்கிறார் என்ற வதந்தி பரவியது. தெனாலிராமன் அந்தச் சாமியாரைப் பார்க்க' ஆசைப்பட்டார். அவரைப் பற்றி தீவிரமாக விசாரணை செய்தார்.
சாமியாருக்குக் கூனன் ஒருவன் சிஷ்யனாக இருக்கிறான். அவன் ஒரு சலவைத் தொழிலாளி என்று தெரிந்து கொண்டான்.
தெனாலிராமன் இனனைப் பார்த்தார். அவனிடம் சாமியாரைப் பற்றி விசாரித்தார். சாமியார் சகல வித்தைகளையும் கற்றவர். பேய், பிசாசு, பூதங்களை விரட்டுபவர். அவர் கொடுக்கும். லேகியத்தைச் சாப்பிட்டால் சகல நோய்களும் போய்விடும் என்று சொன்னான்.
அந்த லேகியத்தைத்தான் நீ வரில் உள்ள மக்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறாயா?' என்று தெனாலிராமன் கேட்டான்.
ஆமாம் என்று கூனன் சொன்னான்.
தெனாலிராமன் கூளனைப் பார்த்தார். "நீ அந்த லேகியத்தைச் சாப்பிட்டிருக்கிறாயா?" என்று கேட்டார். 'இல்லை' என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு
நகர்ந்தான்.
'சலவையாளளே! செல்லாதே நில்' என்று தெனாலிராமன் சொன்னார். கூனன் திகைத்து நின்றான். என் இவர் நம்மை நிற்கச் சொல்கிறார் என்று யோசித்தான்.
என்ன யோசிக்கிறாய்? நீ கொடுத்த அந்த லேகியத்தைச் சாப்பிட்ட மக்கள் வாந்தி எடுத்தும் பேதி ஆகியும் இறந்து விட்டார்கள். சிலர் புத்தி சுவாதீனம் இல்லாமல் பித்தர்களாக மாறி விட்டார்கள். சிலர் வெறியர்களாக வீதியில் திரிகிறார்கள்' என்று சொன்னார்.
தெனாலிராமன் சொன்னதைக் கேட்டதும் கூனன் பயந்து நடுங்கினான். இந்தச் செய்தி அரசருக்குத் தெரிந்தால் நமக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று பயந்தான்.
ஐயா! என்மீது எந்தத் தவறும் இல்லை. நான் உடல் ஊனமுற்றவன். என் உடல் கூனைப் போக்கிக் கொள்ள சாமியாரிடம் சென்றேன். அவர் தன்னிடம் இருந்த லேசியத்தை கைளில் உள்ள மக்களுக்குக் கொடு, பிறகு உனக்கு வைத்தியம் செய்கிறேன் என்று சொன்னார். அவர் சொன்னதைச் செய்தேன். அந்த லேகியம் மக்களுக்கு இவ்வளவு தீமைகள் செய்யும் என்று எனக்குத் தெரியாது. என்னை மன்னித்து விடுங்கள். என்னை. அரசரிடம் காட்டிக் கொடுக்காதீர்கள்' என்று தெனாலிராமன் காலில் விழுந்து கதறினான்,
'சலவையாளனே! எழுந்திரு, எய்தவன் இருக்க அம்பை நோவதில் என்ன பயன்? எந்த மக்களை அவன் வெறியர்களாகவும். பித்தர்களாகவும் செய்தானோ அதே மக்களால் அவன் தண்டிக்கப்படுவாள். நீ சென்று வா' எனறு சொன்னார்.
கூனன் தப்பித்தால் போதும் என்று ஊரைவிட்டே ஓடிவிட்டான்.
தெனாலிராமன் Gura சாமியாரைத் தேடிக் கொண்டிருந்தார். அவன் தலைமறைவாக வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் கட்டசாமியார் இருக்கும் இடத்தைப் பற்றி தெனாலிராமனிடம் வந்து சொன்னார்கள் தெனாலிராமன் அவன் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அவனிடம் அன்பாகப் பேசினார். அவன் செய்த தவறை எடுத்துச் சொன்னார். ஆனால் சாமியார் தன் தவறை ஒப்புக் கொள்ளவில்லை.
தெனாலிராமன் சாமியாரைப் பிடித்துக் கொண்டு வந்து அரசர் முன் நிறுத்தினார். அரசர் அச்சாமியாருக்கு உரிய தண்டனை வழங்கவில்லை. அவனை விடுதலை செய்தார்.
தெனாலிராமனுக்கு அரசரின் போக்குப் புரியாத புதிராக இருந்தது. குற்றம் செய்தவன் விடுதலை ஆவது நீதியைப் பழிப்பதுபோல் ஆகும் என்று நினைத்தார். குற்றவாளிக்கு உரிய தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தார். அந்தச் சாயியாரைப் பிடித்து வெறியர்களிடம் ஒப்படைத்தார். வெறியர்கள் கபடச் சாமியாரைக் கொன்றார்கள்.
தெனாலிராமன் சொன்ன வைத்தியம் சாமியாரைத் தெனாலிராமன் கொன்றுவிட்டார் என்று
இராஜகுரு அரசரிடம் சொன்னர். இராஜகுரு சொன்னதை அரசர் கேட்டு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார்.
அரசே! என்ன யோசிக்கிறீர்கள். சாமியாரைக் கொன்றது பாவம். பாவத்திற்கு தண்டனையை தெனாலிராமனுக்கு வழங்க வேண்டும்' என்று சொன்னார் இராஜகுரு.
இராஜகுரு சொன்னதைக் கேட்டதும் அரசர் சபையைக் கூட்டினார். சபையோர் அரச முன் இராஜகுரு தெனாலிராமன் செய்த குற்றத்தைச் சொன்னார். அக்குற்றத்திற்காகக் கொடுக்க வேண்டிய தண்டனையும் சொன்னார்கசபையில் கூடியிருந்த அனைவரும் பார்த்தார்கள். அரசர் காவலாளியைப் பார்த்து "காவலாளி! அரசரைப் இராஜகுரு சொன்னபடி தெனாலிராமனை மார்பளவு பள்ளத்தில் புதைத்து அவன் தலையை யானைக் காலால் மிதிக்கவிட்டு இறக்கச் செய்யுங்கள்” என்று சொன்னார்.
அரசரின் கட்டளையைக் கேட்டுச் சிலர் மன வேதனைப் பட்டனர். சிறந்த நகைச்சுவை கவிஞனுக்கு இப்படி ஒரு 'தண்டனையா? என்று பேசிக் கொண்டு சென்றார்கள்
காவலாளிகள் அரசரின் கட்டளையை நிறைவேற்ற பெரும் குழியைத் தோண்டினார்கள். பள்ளத்தில் தெனாலிராமனை இறக்கினார்கள். தலை மட்டும் வெளியில் தெரியும்படி புதைத்தார்க
யானையைக் கொண்டு வந்து அதன் கால்களால் தெனாலிராமனின் தலையை மிதிக்கச் செய்யவேண்டும் என்று காவலாளிகள் யானையை அழைத்து வரச் சென்றார்கள்
பொறாமை குணம் படைத்த இராஜ குருவின் பேச்சைக் கேட்டு அரசர் வழங்கிய தண்டனை இதில் இருந்து எப்படித் தப்பித்துச் செல்வது? என்று யோசித்துக் கொண்டிருத்தார். அப்பொழுது தலைமறைவாக ஓடிப்போன சலவையாளன் கூனன் அந்த வழியே வந்தா
மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் தெனாலிராமனை அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை ஆனால் புதையுண்ட மனிதன் உயிரோடு இருப்பதைப் பார்த்தான். ஐயா! எதற்காகத் தாங்கள் இப்படி இருக்கிறீர்கள்? மண்ணில் புதையுண்
கூனன் இவ்வாறு கேட்டதும் தெனாலிராமனுக்குத் தப்பித்துச் செல்லும் யோசனை தோன்றியது. அந்தக் கூனனை அருகில் அழைத்தார். ஐயா! என்னுடைய உடலும் உன் உடல் போல் கூனலாக இருந்தது. அக்கூனலை நிமிர்த்திக் கொள்வதற்கு இப்படி செய்தேன் என்று சொன்னார்.
தெனாலிராமன் சொன்னதைக் கேட்டதும் கூனனும் அவ்வாறு செய்து கூன் உடலை சரிசெய்து கொள்ள வேண்டும். என்று ஆசைப்பட்டான்.
ஐயா! தாங்கள் சொல்வது உண்மையா? இவ்வாறு மண்ணுக்குள் இருந்தால் கூன் உடல் நிமிர்த்துவிட்டதா? என்று கேட்டான்.
'நான் சொல்வது உண்மை உனக்கு சந்தேகம் இருந்தால் என்னைத் தோண்டி வெளியில் எடுத்துப்பார் என்று சொன்னார்.
கூனன் உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக மணலைத் -தோண்டினான். குழியிலிருந்து தெனாலிராமன் மேலே வந்தார். தன் கைகால்களை உதறினார். கூனன் அவர் செய்யும் செயல்களை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.
என்ன யோசிக்கிறாய்? 'என் உடலைப் போல் உன் உடலும் கூனின்று இருக்க வேண்டுமானால் நான் சொல்வதைப்போல் செய்' என்று சொன்னார். கூனன் தெனாளிராமன் சொன்னதற்குச் ''சரி' என்று தலையை ஆட்டினான்.
நான் உள்னை இந்தப் பள்ளத்தில் போட்டுப் புதைக்கிறேன். நீ இந்தப் புதைக் குழியில் சிலமணி நேரம் இருந்தால் உன் கூள் உடல் நிமிர்வதைத் தெரிந்து கொள்வாய்' என்று சொன்னார்.
தெனாவிராமன் சொன்னபடி கூனன் குழிக்குள் இறங்கினான். தெனாலிராமன் அக்கூனனைக் குழியில் புதைத்தான், கூளனே உன் உடல் நிமிர்வதற்கு இதைவிடச் சிறந்த வைத்தியம் இல்லை. அதனால் குழியில் இரு என்று சொல்லிலிட்டுச் சென்றார்.
காவலாளிகள் யானையைக் கொண்டு வந்தார்கள். குழியில் புதையுண்டு தலைமட்டும் தெரியும் ஆளைப் பார்த்தார்கள். யானையை விட்டு அவன் தலையை மிதிக்கச் சொன்னார்கள். யானை தலையை மிதித்தது. கூனன் இறந்தான்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிரபலமான இடுகைகள்
ஞானிக்கு பாடம் சொன்ன இராமன்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக